படைத்தல் என்றால் சிருஷ்டிகளுக்கு இருப்பை (existence) வழங்குதல் என பொருள்.
எந்தப் பொருளையும் படைக்க முடியாதவற்றையா (இறைவனுக்கு) இணை வைக்கின்றனர்?அவைகளும் (இறைவனால்) படைக்கப்பட்டவையே.(7:191) என்கிறது இறைவேதம்.
‘படைக்குதல்’ என்பதை இறைத் தன்மையென்கிறது இந்த இறைவசனம்.
அதே நேரத்தில், இறைவன் தன்னை ‘படைப்பாளர்களில் அழகிய படைப்பாளன்’ என பல படைப்பாளர்களை தன்னுடன் ஒப்பிட்டு கூறுகின்றான்.
அப்படி என்றால் படைக்கும் சிருஷ்டிகளும் இறைத் தன்மை பெற்றவையா?