"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பயங்கரவாத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் வெளிப்படுத்திய இந்த நியாய உணர்வினை “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் எழுத்தாளர் வாஸந்தி எழுதியிருந்தார். உயிர்மை நடத்தும் உயிரோசை டிசம்பர் 2008 வார இணைய இதழில் வெளி வந்த அந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.